கேரள பிரசன்ன ஜோதிடம் கணிப்பு

பிரசன்னம் என்பது ஜோதிடத்தில் ஒரு முக்கியமான பகுதி. ஒரு குறிப்பிட்ட விஷயம் சம்மந்தமாக கேட்கப்படும் கேள்விக்கு, ஜனன ஜாதகத்தை கருத்தில் கொள்ளாமல், கேள்விகேட்பவர் கேள்வி கேட்ட நேரத்தின்போது இருக்கும்  கிரக நிலைகளை கொண்டு பதில் கூறுவதே ‘பிரசன்னம்’ ஆகும்.இதில் சிறந்து விளங்கப்படுவது மற்றும் துல்லியமான கணிப்பை தருவதே கேரள பிரசன்ன ஜோதிடம் ஆகும். துல்லியமான கேரள பிரசன்ன ஜோதிடம் கணிப்பை திறமை வாய்ந்த ஜோதிடர்கள் மூலம் பெற அணுகவும் ஆஸ்க்ஜோசியர்.காம்.

பொதுவாக ஜனன ஜாதகம் என்பது, ஒரு குழந்தை பிறந்த நேரத்தின் போது வான்மண்டலத்தில் உள்ள நவக்கிரகங்களின் நிலையைக் கொண்டு கணிதம் செய்யப்பட்டு கணித்து எழுதப்படும் குறிப்பு ஆகும். இந்த ஜனன  ஜாதகத்தில் உள்ள விதி என்கிற கொடுப்பினை மூலமாக, அந்த ஜாதகர் தன் வாழ்நாளில் அனுபவிக்க கூடிய நல்ல, தீய பலன்களைப் பற்றியும், மதி என்கிற தசாபுத்திகள் மூலமாக அந்த நல்ல தீய பலன்கள் எப்போது நடைபெறும் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

ஜனன ஜாதகமே இல்லாதவர்களுக்கும், பிறந்த நேரம் தெரியாதவர்களுக்கும், பிறந்த நேரத்தில்   குழப்பம் உள்ளவர்களுக்கும்,கேரள பிரசன்ன ஜோதிடம்  என்பது ஒரு மிகப்பெரிய வரம் என்றே கூற வேண்டும். ஜாதகமே இல்லை என்றாலும் வாழ்க்கையில் எழும் பல வகையான பிரச்சனைகளுக்கும், சில முக்கிய முடிவுகள் எடுப்பது சம்பந்தமான கேள்விகளுக்கும் ஜோதிட ரீதியில் இந்த கேரள பிரசன்ன ஜோதிடம் முறை மூலமாக மிக எளிதில் தீர்வு காண முடியும்.

கட்டுப்பாடுகள்



கேரள பிரசன்ன ஜோதிடத்திற்கு என்று சில கட்டுப்பாடுகள்  இருக்கின்றன. அவற்றை விரிவாக பாப்போம். 

Comments